×

மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதம்

நீடாமங்கலம், ஆக.8: தண்டவாளத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக மன்னை எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை நீடாமங்கலத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதியடைந்தனர். சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை சுமார் 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வருவது வழக்கம்.

நேற்று அதிகாலை சுமார் 5.10 மணிக்குத் தான் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக ரயில் வந்ததால் ரயில் பயணிகள் சிரமப்பட்டனர். தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்தது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அரை மணி நேரம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Dinakaran ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...